
இரத்த சொந்தமுமில்லை!
சொந்த இரத்தமுமில்லை!
இது என்ன உறவோ?!
இதயத்தில் வலிகூடி –அழும்
இமைகளில் வழிந்தோடி -விழும்;
கண்ணீர்துளிகளை,
துடைத்திடும் நேரங்களில்….
உன்னில் அன்னையை உணர்கிறேன்!!
தேவைகளின் இறுக்கத்திலே -ஒரு
தீவைப் போல இருக்கையிலே,
இன்னலென உணர்ந்த கணமே -எனக்கு
மின்னலென உதவின மனமே!
உன்னில் தந்தையை உணர்கிறேன்!!
உனக்கு பிடிக்காதவர்களோடு
நான் பேச நேர்ந்தால்,
உனக்கு பிடித்தவர்களோடு
நான் பேசிக்கொண்டேயிருந்தால்….
உனக்குள் எழும் கோபவேளைகளில்;
உன்னில் காதலை உணர்கிறேன்!!
இது என்ன உறவோ?!
இதன் பெயர்தான் நட்போ!!
Friday, June 24, 2011
இது என்ன உறவோ?!
Posted by
ஷீ-நிசி
at
Friday, June 24, 2011
Labels: உறவு கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment