
உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!
விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!!
*
பூவுலகில் மனிதரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
நிலவோடு ஒப்பிடுகிறார்கள்...
என் தேவதையே....
வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!
*
நான் உன்னை அதிகமாய்
நேசிப்பதில்லையென்று; – நீ
என்னிடத்தில் கோபம் கொள்கிறாய்....
உனக்கு தெரியவில்லையடி!!
நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!
*
ஷீ-நிசி
Wednesday, February 11, 2009
இது காதல் மாதம்!
Posted by
ஷீ-நிசி
at
Wednesday, February 11, 2009
2
comments
Labels: காதல் கவிதைகள், குறுங்கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)